
சிவகார்த்திகேயன் - ஹன்சிகா மொத்வானி முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் மான் கராத்தே.
இந்தப் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலுக்கு தேவாவை அழைத்து பாடவைத்த அனிருத், கூடவே தானும் சேர்ந்து பாடலை பாடியதோடு நடனமும் ஆடியிருக்கிறாராம். இது இந்த வருடத்தின் சிறந்த பாடலாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச்-1ம் தேதி நடக்கவிருக்கிறது. படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் அனிருத்.
'எதிர்நீச்சல்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கித் தந்த அனிருத், இப்போது 'மான் கராத்தே' படத்திலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment