சென்னையில் மீண்டும் தீ விபத்து

சென்னை :சென்னை மகாகவி பாரதி நகரில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.இவ்விபத்தி்ல் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன. 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக நேற்று மாலை இதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பு பகுதியில் 16 அடி நீள ராஜநாகம்

பந்தலூர்: குடியிருப்பு பகுதியில் வந்த, 16 அடி நீள, ராஜநாகம் பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், இதுவரை, 10க்கும் மேற்பட்ட, ராஜ நாகங்கள் பிடித்து, வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சேரம்பாடி மின்வாரியத்தில் பணியாற்றி வரும், ஹரிதாஸ் என்பவரின் வீட்டின் முன், நேற்று முன்தினம் இரவு, பெரிய பாம்பு ஒன்று, ஊர்ந்து சென்றுள்ளது.
தகவலறிந்து, பாம்பு பிடிக்கும் ராஜ்குமார், 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை, லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் காண்பித்து, கோட்டமலை வனப்பகுதியில் விட்டார்.

வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை குட்டி

கூடலூர்: வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை குட்டியை, வனத்துறையினர் மீட்டு, முதுமலை வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம், மரப்பாலத்தைச் சேர்ந்த, லதா என்பவரின் வீட்டிற்குள், சிறுத்தை குட்டி ஒன்று புகுந்தது. பூனை போல் இருந்ததால், இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைவில்லை; இருப்பினும், சீறியவாறு இருந்ததால், அச்சம் ஏற்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர், நேற்று காலை, சிறுத்தை குட்டியை மீட்டு, முதுமலை புலிகள் காப்பக வனத்தில் விட்டனர். வனச் சரகர் கணேசன் கூறுகையில், ""பிடிப்பட்ட பெண் சிறுத்தை குட்டிக்கு, ஒரு வயது இருக்கும். அது, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தது. உணவாக மீன் வழங்கப்பட்டு, முதுமலை வனப் பகுதியில் விடப்பட்டது,'' என்றார்.

கத்தார் ஓட்டலில் வெடி விபத்து: 12 பேர் பலி

தோகா: கத்தார் நாட்டு ஓட்டலில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஆசிய நாட்டவர்கள் உட்பட, 12 பேர் உயிரிழந்தனர். அரபு நாடான, கத்தாரின், தோகா நகரில், வணிக வளாகத்துடன் இணைந்த ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலையொட்டி, பெட்ரோல் "பங்க்' உள்ளது. ஓட்டலின் மேற்கூரையில் இருந்த, எரிவாயு தொட்டி, நேற்று, திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதில், ஆசிய நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் உட்பட, 12 பேர் உயிரிழந்தனர். ஓட்டலின் கூரை இடிந்து விழுந்துள்ளதால், இடிபாடுகளில் சிக்கி, 31 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடக்கின்றன.

சேவை குறைபாடு : ஏர்டெல்லுக்கு அபராதம்

அபுஜா: சென்ற ஜனவரியில், மொபைல்போன் சேவை குறைபாடு காரணமாக, நைஜீரிய தொலைத்தொடர்பு ஆணையம் (என்.டி.ஏ.,), பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு, 18.50 கோடி நைரா (ரூ.6.80 கோடி) அபராதம் விதித்துள்ளது. குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வரை, நைஜீரியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனம், 'சிம்' கார்டுகள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 7ம் தேதிக்குள் அபராதம் செலுத்தத் தவறினால், அத்தொகையை செலுத்தும் வரை, நாள்தோறும் 25 லட்சம் நைரா செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று, நைஜீரியாவில் செயல்படும், எம்.டி.என்., குளோபோகாம் நிறுவனங்களும், மோசமான மொபைல்போன் சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
17 கோடி மக்கள் வசிக்கும் நைஜீரியாவில், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி நிலவரப்படி, 15.60 கோடி மொபைல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். தொலைத்தொடர்பு சேவையை நான்கு
நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் மீது, என்.டி.ஏ., ஏற்கனவே பலமுறை இதுபோன்ற நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டுமா?

உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து.


உருவாகும் விதம்:



இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம். அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. அதிக விலை கிடைப்பதால் தற்போது இந்த விற்பனையில் கலப்படம் மற்றும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இதை தடுக்க, உண்மையான காபி கொட்டைகளை அறிவியல் முறைப்படி சோதனை செய்து கண்டு பிடித்து அங்கீகாரம் அளிக்க உள்ளனர். 

18 வயதினருக்கு அழகுபடுத்தும் சிகிச்சை: தைவானில் தடை

தைபே: தைவானில், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, அழகை மேம்படுத்தும் சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில், மூக்கு சரிசெய்தல், மார்பகத்தை பெரிது படுத்துதல், இரட்டை கண்ணிமை, நிறம் மாற்றுதல், போன்றவற்றுக்காக, இளம் பெண்களுக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது. பலருக்கு இந்த சிகிச்சைகள் தோல்வியில் முடிந்து, வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. இதன் காரணமாக, தைவான் அரசு, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான, அழகு சிகிச்சைக்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, தைவான் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது: இளம் பெண்களுக்கு, இதுபோன்ற சிகிச்சைகள் தேவையற்றது. இதனால், உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அழகுபடுத்துவதற்கான, "பிளாஸ்டிக் சர்ஜரி' இளம் பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, சிகிச்சை செய்யும் டாக்டருக்கு, 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அது மட்டுமல்லாது, அவர்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவர்; உச்சகட்டமாக, டாக்டரின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்தியர் 5 பேர் சவுதியில் கொலை

ரியாத்: சவுதி அரேபியாவில், ஐந்து இந்தியர்களை உயிரோடு எரித்து புதைத்ததாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுதியில், சாப்வா என்ற இடத்தில், 2010ல், ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக, ஐந்து இந்தியர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். அங்கிருந்த பண்ணையில் வேலை செய்த, மூன்று பேர், குடி போதையில், இந்த ஐந்து பேரையும், குழியில் தள்ளி, உயிரோடு எரித்து புதைத்துள்ளனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர். நேரடி குற்றத்தில் ஈடுபட்ட, மூன்று பேர், நீதிமன்றத்தில், ஆஜராகி, வாக்குமூலம் அளித்தனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாதி எரிந்த நிலையில் கிடந்த, ஐந் து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், சிலரது அடையாள அட்டையும், மோதிரமும், உடைகளும், விசாரணைக்காக, போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

பாக்., அசத்தல் வெற்றி: உமர் அக்மல் சதம்

பதுல்லா: ஆசிய கோப்பை தொடரில், 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், உமர் அக்மல் சதம் அடித்து கைகொடுக்க, 72 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 3வது லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான், அறிமுக ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.அக்மல் அபாரம்:

பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் கான், அகமது ஷேசாத் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த போது ஷார்ஜீ்ல் கான் (25) அவுட்டானார். முகமது ஹபீஸ் (10) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் அகமது ஷேசாத், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். ஒரு பந்தை கூட சந்திக்காத கேப்டன் மிஸ்பா (0) 'ரன்–அவுட்' ஆனார். அடுத்து வந்த சோகைப் மக்சுத் (13), அப்ரிதி (6) சொற்ப ரன்னில் வௌியேறினர். அன்வர் அலி (21), உமர் குல் (15) நிலைக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் தனிநபராக போராடிய உமர் அக்மல், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பதம்பார்த்தார். தாவ்லத் ஜத்ரன் வீசிய 50வது ஓவரில், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய உமர் அக்மல், ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்தது. உமர் அக்மல் (102), சயீத் அஜ்மல் (1) அவுட்டாகாமல்  இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் தாவ்லத் ஜத்ரன், மிர்வைஸ் அஷ்ரப், சமியுல்லா ஷென்வாரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.அசத்தல் பந்துவீச்சு:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாசத் (9) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய நுார் அலி ஜத்ரன் (44), அஜ்மல் 'சுழலில்' சிக்கினார். பின் இணைந்த அஸ்ஹர் ஸ்டானிக்ஜாய், நவ்ரோஸ் மங்கல் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது ஸ்டானிக்ஜாய் (40), அப்ரிதியிடம் சரணடைந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த நவ்ரோஸ் மங்கல் (35) 'ரன்–அவுட்' ஆனார்.

அடுத்து வந்த நஜிபுல்லா ஜத்ரன் (1), கேப்டன் முகமது நபி (15), மிர்வைஸ் அஷ்ரப் (4), தாவ்லத் ஜத்ரன் (0), ஷபூர் ஜத்ரன் (0), சமியுல்லா ஷென்வாரி (14) சொற்ப ரன்களில் வௌியேறினர்.

ஆப்கானிஸ்தான் அணி 47.2 ஓவரில் 176 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஹபீஸ் 3, சயீத் அஜ்மல், உமர் குல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிறந்த வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் அணிக்கு (5 புள்ளி), கூடுதலாக ஒரு போனஸ் புள்ளி வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் உமர் அக்மல் வென்றார்.

umar akmal, pakistan

சங்ககராவிடம் சரிந்தது இந்தியா : கடைசி ஓவரில் இலங்கை வெற்றி

பதுல்லா: ஆசிய கோப்பை லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. துாணாக நின்று சதம் அடித்த சங்ககரா, இலங்கை அணிக்கு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இந்திய வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் வீணானது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இலங்கை அணியில் சுரங்கா லக்மலுக்கு பதிலாக அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

தவான் அபாரம்:

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (13) மோசமான துவக்கம் கொடுத்தார். பின் ஷிகர் தவான், கேப்டன் விராத் கோஹ்லி சேர்ந்து அசத்தலாக ஆடினர். மலிங்கா வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார்.  இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த போது, அஜந்தா மெண்டிஸ் 'சுழலில்' கோஹ்லி (48) போல்டானார்.

அடுத்து வந்த ரகானே (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அசத்திய தவான், திசாரா பெரேரா வீசிய 26வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அபாரமாக ஆடிய இவர் (94), மெண்டிஸ் பந்தில் போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 'மிடில்–ஆர்டர்' ஏமாற்றம்:

இதற்கு பின் வந்தவர்கள் சொதப்பினர். தினேஷ் கார்த்திக் (4), அம்பதி ராயுடு (18) சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்டூவர்ட் பின்னி 'டக்–அவுட்' ஆனார். மலிங்கா 'வேகத்தில்' அஷ்வின் (18) நடையை கட்டினார். புவனேஷ்வர் குமார் (0), மெண்டிஸ் பந்தில் அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா, ஒரே ஒரு சிக்சர் மட்டும் அடித்தார். மெண்டிஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாசிய முகமது ஷமி ஆறுதல் தந்தார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (22), முகமது ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர். 

இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, சேனநாயகே 3 விக்கெட் கைப்பற்றினர்.

குசால் அரைசதம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய 6வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த திரிமன்னே, அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது அஷ்வின் பந்தில் திரிமன்னே (38) அவுட்டானார். முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த குசால் பெரேரா, ஒருநாள் அரங்கில் தனது 3வது அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்கள் எடுத்த போது அஷ்வினிடம் சரணடைந்தார்.'ஹாட்ரிக்' நழுவல்:ஆட்டத்தின் 32வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா 'இரட்டை அடி' கொடுத்தார். இந்த ஓவரின் முதலிரண்டு பந்தில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0) அடுத்தடுத்து அவுட்டானார்கள். மூன்றாவது பந்தில் கேப்டன் மாத்யூஸ் 2 ரன்கள் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. பின், முகமது ஷமி 'வேகத்தில்' மாத்யூஸ் (6) பெவிலியன் திரும்பினார்.

சங்ககரா சதம்:

அடுத்து வந்த சேனநாயகே (12), சதுரங்கா டி சில்வா (9) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அபாரமாக ஆடிய சங்ககரா போட்டியை மீண்டும் இலங்கை வசம் கொண்டு வந்தார். முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், ஒருநாள் அரங்கில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். இவர், 84 பந்தில் 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த திசாரா பெரேரா, அஜந்தா மெண்டிஸ் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

இலங்கை அணி 49.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திசாரா பெரேரா (11), மெண்டிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலா 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.ஆட்டநாயகன் விருதை இலங்கையின் சங்ககரா வென்றார்.

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் 'பரம எதிரி'யான பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது. பைனல் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

கோஹ்லி சாதனை

நேற்று 48 ரன்கள் எடுத்த கோஹ்லி, 125 இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை (5588 ரன்கள்) பின்னுக்குதள்ளி புதிய சாதனை படைத்தார். இதுவரை கோஹ்லி 125 இன்னிங்சில் 5629 ரன்கள் எடுத்துள்ளார்.

* ஓய்வில்லாமல் விளையாடி வரும் விராத் கோஹ்லி, தொடர்ந்து 100வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம் சச்சின் (185 போட்டிகள்), அசாருதின் (126) ஆகியோருக்கு பின் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். கோஹ்லி ஒட்டுமொத்தமாக 132 போட்டிகளில் 5629 ரன்கள் எடுத்துள்ளார்.

அஷ்வின் '100'

நேற்று, இலங்கையின் திரிமன்னே, குசால் பெரேராவை அவுட்டாக்கிய இந்தியாவின் அஷ்வின், ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 17வது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர், 77 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் அனில் கும்ளே (334 விக்கெட்), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகார்கர் (288) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.


Dhawan, india, cricket

மீண்டும் இந்திய அணியில் இடம் : யூசுப் பதான் நம்பிக்கை

ராஜ்கோட்: விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்,'' என, பரோடா அணி கேப்டன் யூசுப் பதான் தெரிவித்தார்.

இந்திய அணியின் 'ஆல்–ரவுண்டர்' யூசுப் பதான், 31. இதுவரை 57 ஒருநாள் (810 ரன்கள், 33 விக்கெட்), 22 சர்வதேச 'டுவென்டி–20' (236 ரன்கள், 13 விக்கெட்) போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2012க்கு பின் தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். தற்போது இவர், விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மேற்கு மண்டல பிரிவில் பரோடா அணியின் கேப்டனாக உள்ளார். ராஜ்கோட்டில் இன்று பரோடா அணி, மும்பை அணியை சந்திக்கிறது.

இதுகுறித்து யூசுப் பதான் கூறியது: தற்போது எனது கவனம் முழுவதும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் உள்ளது. இதில் திறமையை வௌிப்படுத்தும் பட்சத்தில், விரைவில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெறலாம். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். விஜய் ஹசாரே தொடருக்கான இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டி முக்கியமானது. தொடரை வெற்றியுடன் துவக்கும் பட்சத்தில், அடுத்து வரும் போட்டிகளுக்கு உற்சாகம் அளிக்கும். எங்கள் பரோடா அணியில் திறமையைான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இன்றைய போட்டியில் விளையாட இர்பான் பதான் தயாராக உள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,), காயத்தில் இருந்து மீண்டு வரும் பயிற்சி மேற்கொண்ட இவர், இன்று பந்துவீச காத்திருக்கிறார்.

இவ்வாறு யூசுப் பதான் கூறினார்.

yusuf pathen, cricket

சர்ச்சை கிளப்பிய உலக கோப்பை டி சர்ட்

சாவோ பாலோ: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், 20வது உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது.

உலக கோப்பை தொடரை பார்க்க  ரசிகர்கள் வரவுள்ள நிலையில், பாலியல் தொழில் கொடி கட்டிப் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தடுக்க பிரேசில் நிர்வாகம் பெரும் பாடுபட்டு வருகிறது. இதனிடையே, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனியின் பிரபல அடிடாஸ் நிறுவனம், பெண்களின் பின்னழகை குறிக்கும் வகையில் வெளியிட்ட கால்பந்து 'டி சர்ட்', சர்ச்சை கிளிப்பியுள்ளது. 

இது விற்பனைக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பிரேசில் சுற்றுலாத் துறை கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த 'டி சர்ட்டுகளை' திரும்ப பெறுவதாக அறிவித்தது அடிடாஸ் நிறுவனம்.

FIFA World Cup, brazil

இலங்கை அணி சிறப்பான ஆட்டம்

 பதுல்லா: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை  லீக் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றது.

பதுல்லாவில் இன்று நடக்கும் தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கையை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ் 'பீல்டிங்' தேர்வு செயதார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் அளித்தது. மாத்யூஸ் பந்தில் முதலில் ஒரு பவுண்டரி அடித்த தவான், தொடர்ந்து மலிங்கா பந்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். சேனநாயகே 'சுழலில்'  ரோகித் சர்மா (13) 'பெவிலியன்' திரும்பினார். கோஹ்லி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் (94) சத வாய்ப்பை இழந்தார். ராயுடு (18), தினேஷ் கார்த்திக் (4), பின்னி (0) நிலைக்கவில்லை. அஷ்வின் (18), புவனேஷ்வர் (0) விரைவில் வெளியேறினர். இந்திய அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு, 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா (22), ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. புவனேஷ்வர் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்து ஷமி பந்தை பெரேரா சிக்சருக்கு பறக்கவிட்டார். அரை சதம் கடந்த இவர் 64 ரன்களில் வெளியேறினார். ஜடோஜ சுழலில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0)  சிக்கினர். மாத்யூஸ் (6) சொற்ப ரன்னில் அவுட்டானார். இலங்கை அணி 37ஓவரில் 5 விக்கெ்ட்டுக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (42), சேனநாயகே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

Kusal Perera, srilanka

இந்தோனேசியாவில் புகை மூட்டம் : அவசர நிலை அறிவிப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில், காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தால், மக்கள் அவதிக்குள்ளானதால், அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் உள்ள காடுகளை அழித்து, தொழிற்சாலை கட்டுவதற்காக, சிலர், காடுகளுக்கு தீ வைப்பதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டும், சில விஷமிகள் வைத்த தீயால், ரியூ மாகாணத்தில் உள்ள காட்டில், தீ பரவி வருகிறது.
இதனால், அந்த மாகாணம் முழுவதும், புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர்; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது; சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; இன்னும் சில விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேகங்களில் ரசாயனங்களை தூவி, செயற்கை மழையை வரவழைத்து, வெப்பத்தை தணிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த மாகாணத்தில், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகையால் பாதிக்கப்பட்டுள்ள, 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்க, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா 247/9

பதுல்லா : வங்கதேசத்தில் நடைபெறும் வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட் செய்யும் இந்திய அணி 48.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.

இளையராஜாவுக்காக காத்திருக்கும் டைரக்டர் மகேந்திரன்!

Director Mahendran waiting for Ilayaraja
1978ல் ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். தனக்கென ஒரு தனித்துவத்துடன் படங்களை இயக்கி வந்த அவர், அதைத் தொடர்ந்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, கை கொடுக்கும் கை உள்பட 12 படங்களை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய 12 படங்களில் 10 படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.கடைசியாக 2006ல் சாசனம் என்ற படத்தை இயக்கிய மகேந்திரன், தற்போது மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்தபடி தனது புதிய படத்திற்காக களமிறங்கியுள்ளார். புலமைப்பித்தன் எழுதிய ஒரு கதையின் ஒரு பகுதியைக்கொண்டு இப்படம் உருவாகயிருப்பதாக சொல்லும் மகேந்திரன், என் படங்களுக்கு வசனம் போன்றே பின்னணி இசையினை அற்புதமாக வழங்கியவர் இளையராஜா.அதனால் இந்த படத்திற்கும் அவர் இசை தீட்டுவது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்துள்ளது.

மேலும், நான் இயக்கிய பல படங்களின் கதையினை கேட்டதும் அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்கிறபோது இளையராஜாவே பலமுறை இந்த தலைப்பை வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அந்த வகையில், உதிரிப்பூக்கள் தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதனால் இந்த படத்திற்கும் தலைப்பு வைக்கிற பொறுப்பினை அவரிடமே விட்டுவிட்டேன். இளையராஜா என்ன தலைப்பு வைத்தாலும் அதுதான் இந்த படத்தின் டைட்டில் என்பதையும் முடிவு செய்து விட்டேன். அதனால் அவர் படத்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் மகேந்திரன்.

அப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்!

Prithiviraj to become a father soon
2006ல் கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் அறிமுகமானவர் ப்ருதிவிராஜ். அதையடுத்து வெள்ளித்திரை, மொழி, அபியும் நானும், சத்தம் போடாதே, ராவணன் உள்பட பல படங்களில் நடித்த அவர், தற்போது வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துக்கொண்டிருப்பதோடு அடுத்து, மா என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, தமிழ்-மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அவரது கேரியர் பிசியாக சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையில், நேற்று தனது டுவிட்டரில் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் ப்ருதிவிராஜ். அதில், நான் விரைவில் அப்பாவாகப்போகிறேன், என் மனைவி சுப்ரியா அம்மாவாகப்போகிறார் என்று தெரிவித்துள்ள அவர், இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 2011ல். சுப்ரியாவை கைப்பிடித்த பிறகு ப்ருதிவிராஜின் மலையாள சினிமா மார்க்கெட் சூடுபிடித்தது. மோகன்லால்-மம்மூட்டிக்குப்பிறகு மலையாளத்தில் ஒரு முக்கியமான நடிகராகி விட்டார். குறிப்பாக போலீஸ் ஸ்டோரி என்றாலே ப்ருதிவிராஜ்தான் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆக மனைவி தனது வாழ்க்கையில் வந்த பிறகு சினிமாவில் பெரிய வெற்றி கிடைத்தது போல், தனது வாரிசு வந்தபிறகு இன்னும் தனது மார்க்கெட் எகிறும் என்றும் எதிர்பார்த்துககொண்டிருக்கிறாராம் ப்ருதிவிராஜ்.

ரூ.4,956 கோடியில் 660 மெகாவாட் புதிய அனல் மின் நிலையம்

எண்ணூரில் 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புதிய திட்டத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டியதோடு, லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் எல்.மதுசூதன் ராவிடம் அந்தத் திட்டத்துக்கான பணி ஆணையையும் வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன், (இடமிருந்து) தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மின் வாரியத் தலைவர் கே.ஞானதேசிகன், எரி சக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி. எண்ணூரில் 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட புதிய திட்டத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டியதோடு, லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் எல்.மதுசூதன் ராவிடம் அந்தத் திட்டத்துக்கான பணி ஆணையையும் வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன், (இடமிருந்து) தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மின் வாரியத் தலைவர் கே.ஞானதேசிகன், எரி சக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ.4,956 கோடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்திலேயே முதல் முறையாக, குறைந்த அளவு நிலக்கரியில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் - சூப்பர் கிரிட்டிக்கல்- தொழில்நுட்பத்தில் இந்த அனல் மின் நிலையம் (நன்ல்ங்ழ் இழ்ண்ற்ண்ஸ்ரீஹப் பட்ங்ழ்ம்ஹப் டர்ஜ்ங்ழ் நற்ஹற்ண்ர்ய்) அமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், அனல் மின் நிலையத் திட்டத்தை ரூ.3,961 கோடியில் நிறுவுவதற்கான பணி ஆணையை லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் எல். மதுசூதன் ராவிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் என்னும் புதிய திட்டம் - சூப்பர் கிரிட்டிக்கல் - தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 29.03.2012-ஆம் தேதி அறிவித்தார். இந்தத் திட்டப் பணிக்கு தமிழக அரசு 30.03.2012-ஆம் தேதி அனுமதி வழங்கியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு, பிற அனுமதிகளும் பெறப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இந்த ஒப்பந்தப் புள்ளியில் ஹரியாணா மாநிலம், குர்காவ்னில் அமைந்துள்ள லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மின் வாரியத் தலைவர் கே.ஞானதேசிகன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் எஸ்.சி. மனோச்சா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

24 மணி நேர இசை விழா தொடங்கியது

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே 108 நாதஸ்வரங்கள், 108 தவில்களைக் கொண்டு நடத்தப்படும் 24 மணி நேர நாதஸ்வர இசை விழா வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவன்று திருவண்ணாமலை கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கம் சார்பில் 24 மணி நேர நாதஸ்வர இசை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான இசை விழா வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள உண்ணாமுலையம்மன் தேர் அருகே நடைபெறும் இவ்விழாவை கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தனுசு தொடங்கி வைத்தார். இதையடுத்து 108 நாதஸ்வரங்கள், 108 தவில்களைக் கொண்டு இசை விழா நடத்தப்பட்டு வருகிறது.

குளத்தில் வாசிப்பு:

இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை 108 நாதஸ்வர வித்வான்கள், 108 தவில் வித்வான்கள் ஒன்று சேர்ந்து கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை தீர்த்தக் குளத்தில் இறங்கி சுமார் 20 நிமிடங்களாக கச்சேரி நடத்தினர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு, மகிழ்ந்தனர்.

இதன்பிறகு, அம்மன் தேர் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து வித்வான்கள் தங்களின் இசை விழாவைத் தொடங்கினர்.இவ்விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) காலை 6 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரமும் நடத்தப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வர தவில் இசைச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளுக்கு முதல்வர் நிதியுதவி

தாய், தந்தையரை இழந்து வாடும் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்பு நிதி பத்திரங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

’கோச்சடையான்’ இசை விழாவில் அமிதாப்பச்சன்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. 'கோச்சடையான்' படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிபோடப்பட்டு இறுதியாக ஏப்ரல் 11ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் (மார்ச்) 9–ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பாலிவுட் நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. 'மன்னன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சொந்த குரலில் ஒரு பாடலை கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார் என்பது இந்த படத்தின் சிறப்பு. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

அபூர்வ நாயகன் கமல் ஹாசன் புத்தக வெளியீட்டு விழா

நடிகர் கமல் ஹாஸனைப் பற்றி அபூர்வ நாயன் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசனைப் பற்றிய அபூர்வ நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள கமல் ஹாசனின் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இப்புத்தகத்தை உருவாக்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை கமல் ஹாசன் பெற்றுக் கொண்டார். கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கமலஹாசனின் அபூர்வ புகைப்படங்களும், அவர் நடித்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் பல முன்னணி கவிஞர்களின் வாழ்வியல் கவிதைகளும் அடங்கிய தொகுப்பாக, களஞ்சியமாக இப்புத்தகம் திகழ்கிறது. உலக அரங்கில் தமிழ் திரைத்துரையை தலைநிமிரச் செய்த கலைஞன் கமலஹாசனின் சாதனைகள் குறித்த பெட்டகமாக திகழும் இப்புத்தகம், நிகழ்காலத்தில் மட்டுமின்றி வருங்கால சரித்திரத்திலும் தனியிடம் பெறுமென்பதில் ஐயமில்லை.

1960-ல் திரைத்துறையில் நுழைந்து, 55 வருடங்களாக தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சமர்ப்பணமாக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது என்று ராம்ராஜ் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் கூறினார்.

கொழும்பில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்துவதா? - இயக்குநர் வ.கௌதமன் எதிர்ப்பு

கொழும்பில் தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்க வில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை.ஒட்டுமொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும்,இறுதி நாளில்40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது, உலகம் முழுதும் அறிந்த உண்மை.2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை.

அதுமட்டுமில்லாமல் வரும் மார்ச் மாதம் ஐநா வில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லண்ணா துயரத்திற்கு ஆளானோம். அதே நேரத்தில்(மார்ச்10) ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நீதி கேட்டு நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி ந்டப்பது தான் வேதனையானது. மார்ச்1,2 ல் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து தனியார் தொலைக்காட்சி பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை st.Joseph கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.

இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்திற்க்கு காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாகதான் இது நடக்கிறது. இதற்கு தனியார் தொலைக்காட்சியும் துணை போவது கொடுமையானது. தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு, சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார். இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும்,அதற்கு தனியார் தொலைக்காட்சி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது. எங்கள் பினங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறொம். இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

45 நாட்களாக சென்னை முழுக்க ஓடிக்கொண்டேயிருந்த விதார்த்!

மைனா’ விதார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ”ஆள்”. இந்தியில் வெளியான ஆமீர் என்ற படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் முதன்முறையாக கோட்-சூட் அணிந்து டிப்-டாப்பாக நடித்திருக்கிறார் விதார்த்.
ஆனால் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதையில் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு வேடம். அவரை அப்படி ஓட வைப்பது யார்? எதை சொல்லி அப்படி ஓட வைக்கிறார் என்பதுதான் சஸ்பென்ஸ்.

இப்படம் பற்றி விதார்த் கூறுகையில், முதலில் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை கேட்டபோது நான் ஒரு படப்பிடிப்புக்காக பாங்காங்கில் இருந்தேன்.
அப்போது கண்டிப்பாக நடிப்பதாக சொன்னேன் ஆனால் கதை கேட்கவில்லை. சென்னைக்கு வந்த பிறகு இந்தியில் வெளியான ஆமீர் படத்தின் தழுவல்தான் என்று டிவிடியை கொடுத்தனர். படம் பார்த்து பயந்து விட்டேன். இந்த கதையில் நம்மால் நடிக்க முடியுமா? என்று மிரண்டு போய் நின்றேன்.
ஆனால், டைரக்டர் ஆனந்த் கிருஷ்ணா என்னிடம் வேலை வாங்கிய விதம், மைனா படத்தில் நடித்தபோது, பிரபுசாலமன் சார் என்னை எப்படி நடிக்க வைத்தாரோ அதேபோல் இருந்தது. அதனால் இந்த கதையில் நம்மால் ஸ்கோர் பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனால் துணிச்சலாக களமிறங்கினேன்.
மேலும், இப்படத்துக்காக 45 நாட்களாக நடந்த படப்பிடிப்பில் ஓடிக்கொண்டேயிருந்தேன். 3 கேமராக்கள் என்னை பின்தொடர, சென்னை முழுக்க ஓடியிருக்கிறேன்.
அந்த அளவுக்கு கடுமையாக உழைத்தேன். ஆனால் இப்போது படத்தை பார்க்கையில் எனது நடிப்பு எனக்கே ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் உள்ளது.

இன்னும் அரை கோடியைகூட தொடல! -பீல் பண்ணும் ப்ரியாஆனந்த்

வாமணன்’ படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், எதிர்நீச்சல் படத்திற்கு பிறகுதான் பேசப்படும் நடிகை ஆனார். ஆனபோதும், அவர் நினைத்ததுபோல் அடுத்தடுத்து தனுஷ், சூர்யா என்று அவர் மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லை.
விக்ரம்பிரபு, கெளதம், அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஹீரோக்களுடன்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
Priya-Anand-husband-boyfriend
இந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் மூலம் விமலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ப்ரியாஆனந்த். இந்த படத்தில் வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் ப்ரியாவுக்கும் வெயிட்டான ரோலாம். விமல், சூரிக்கு எப்படியோ அதேபோல் நானும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன் என்று சொல்லும ப்ரியாஆனந்த, இந்த படத்தில் குட்டை பாவாடை அணிந்து கூடுதல் கவர்ச்சி சேவையும் செய்கிறாராம்.
அப்படியென்றால், அடுத்து முழுநேர கிளாமர் ஹீரோயினாக இறங்க அஸ்திவாரம் எழுப்புகிறீர்களோ? என்று கேட்டால், கவர்ச்சி காட்டுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால், அது அந்த கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், அதற்கேற்ற கதைகள் கிடைக்கும்போது கண்டிப்பாக கவர்ச்சி அவதாரமும் எடுப்பேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், கோடம்பாக்கத்துக்கு வந்து ஓரிரு படங்களில் நடித்ததுமே சில நடிகைகள் அரை கோடியை கிராஸ் ப்ணணி விடுகிறார்கள்.
ஆனால், நானோ 5 வருடத்தில் 10 படங்கள் வரை நடித்தும் இன்னும் அரை கோடியை எட்டி பிடிக்க முடியவில்லை. அதுதான் எனக்கு இப்போது பெரிய வருத்தமாக உள்ளது என்றும் தனது மனக்குமுறலை சொல்லி பீல் பண்ணுகிறார்.

உத்தமவில்லனுக்காக வித்தியாசமான மேக்கப்பில் கமல்ஹாசன்!

ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும்போது, தனது கெட்டப்பை மாற்றிக்கொள்ள மேக்கப்பில் அதிக ஈடுபாடு காட்டுவார் கமல்.
1329115303_kamal-hasan-2
அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் படத்தில் தாத்தாவாக நடித்த வேடத்துக்காக தன்னை முழுசாக மாற்றிக்கொள்ள உடம்பை குறைத்தது மட்டுமின்றி, அதற்கான ஒப்பனை செய்து கொள்ளவும் ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை செலவிட்டார்.
அதைத் தொடர்ந்து, அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்திற்காக ஒப்பனை மற்றும் உடை அலங்காரத்திற்கும் பெரும்பகுதி நேரத்தை செலவிட்ட கமல், தசாவதாரம் படத்தில் 10 விதமான வேடங்களுக்காக 10 மணி நேரம் வரை ஒவ்வொரு நாளும் செலவிட்டார். அப்படி கடினமாக அவர் உழைத்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெற்றன.
அப்படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து வரும் கமல் அடுத்து நடிக்கவிருக்கும் உத்தமவில்லன் படத்திலும் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டப்போகிறாராம்.
கே.பாலசந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் வித்தியாசமாக உருவாகியுள்ளதாம்.
அதனால் அதற்கேற்ப தன்னை முழுமையாகமாற்றிக்கொள்ள்போவதாக தெரிவித்துள்ள கமல், அதற்காக மேக்கப் மற்றும் காஸ்டியூமுக்காக மட்டும் ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் வரை செலவிடப்போகிறாராம். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து ஒரு மேக்கப்மேனும் வருகிறாராம்.
ஆக, இனி கமல் நடிக்கும் ஒவ்வொரு படத்திலுமே அவரை மாறுபட்ட தோற்றத்தில்தான் காண முடியும் என்கிற அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

காதல் முறிந்தாலும் ஹன்சிகாவுடன் நட்பும், நடிப்பும் தொடரும்: சிம்பு

ஹன்சிகாவுடன் காதல் முறிந்து விட்டது இனி நானும் தனிஆள்தான் என்று அறிக்கை விட்ட சிம்பு. ஹன்சிகாவுடன் நட்பு தொடர்வதாகவும், அவருடன் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஹன்சிகாவை மனதார காதலித்தது 100 சதவிகிதம் உண்மை. ஆனால் நாங்கள் காதலை அறிவித்த பிறகு நிறைய பிரச்னைகள் துரத்தியது.
Simbu-Hansika
இனிமேல் காதலை தொடர முடியாத அளவுக்கு அது முற்றியது. காதலுக்கு சந்தோஷம்தான் முக்கியமே தவிர பிரச்னைகள் அல்ல. அதனால் இருவரும் கலந்து பேசி பிரிந்து விட்டோம். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து நட்புடன் இருப்போம்.
எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது. காதல் பிரேக்அப் ஆனாலும் ஹன்சிகாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இப்போதுகூட ஐதராபாத்தில் வாலு படத்தில் சேர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனி இருவரும் இணையும் வாய்ப்பு உண்டா என்பது பற்றி எனக்குத் தெரியாது.
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.
சிம்புவுடனான காதல் முறிவுபற்றி ஹன்சிகாவை போனில் தொடர்பு கொண்டு கேட்க முற்பட்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. மாறாக அவரது தாயாரும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் மனநிலையில் அவர் இல்லை என்று கூறிவிட்டார்.

கோச்சடையான் பாடல்களை அமிதாப் வெளியிடுகிறார்!

சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சரிங் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார்.
amitabhrajini295
கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கடந்த இரண்டு வருடமாக தயாரிப்பில் உள்ளது. மூன்று முறை இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியிடும் பலமுறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இப்போது ஏப்ரல் 11, படம் ரிலீஸ் உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியீட்டு விழா வருகிற மார்ச் 9ந் தேதி காலை 10.30 மணிக்கு சத்யம் திரையரங்கில் நடக்கிறது.
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பாடல்களை வெளியிடுகிறார். விழாவில் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, கமல், மகேந்திரன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் மிக முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் ஒரு அழைப்பிதழுக்கு ஒருவர் மட்டும்தான். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது

ரஜினிக்கு உருவான கதையில் அஜீத் நடிக்கிறார்!

மங்காத்தாவிற்கு பிறகு பில்லா-2 தோல்வியடைந்தபோதும், ஆரம்பம், வீரம் படங்களின் ஹிட் காரணமாக கோடம்பாக்கத்தில் காலறை தூக்கி விட்டு நடக்கிறார் அஜீத். இந்தநிலையில், இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர், புதிய கதைகளை ரொம்ப கவனமாக செலக்ட் பண்ணுகிறார்.
TamilActorAjithThree
என்னதான் தன்னை வைத்தே ஹிட் கொடுத்த இயக்குனர்களாக இருந்தாலும், கதை தனக்கு பிடிக்க வேண்டும் என்பதை முன்வைத்தே கேட்கத் தொடங்குகிறார் அஜீத். அந்த வகையில், ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா இரண்டு பேருமே மீண்டும் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், கதையை உள்வாங்கிக்கொண்ட அஜீத், இன்னும் முடிவு சொல்லவில்லையாம். அதேசமயம், தற்போது அனேகன் படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த் சொன்ன கதை அஜீத்துக்கு ரொம்ப பிடித்து விட்டதாம்.
இந்த கதைதான் ரஜினிக்காக அவர் உருவாக்கிய கதையாம். அதனால் கதையில் எந்த திருத்தமும் சொல்லாமல் அப்படியே இருக்கட்டும் என்று ஓ.கே சொல்லி விட்டாராம் அஜீத்.
ஆக, மார்ச் இறுதியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்தை முடித்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதை இப்போதே முடிவு செய்துவிட்டார். இவ்வாண்டு இறுதியில் அப்படமும் தொடங்கப்பட்டு விடுமாம்.

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது குறித்து இளையராஜாவிடம் கேட்காதீங்க! கெஞ்சிய பி.ஆர்.ஓ.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மகேந்திரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குனர் மகேந்திரன். ஆனால் மகேந்திரன் கடைசியாக இயக்கிய சாசனம் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

இதனிடையே படத்திற்கான பிரஸ்மீட் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் இளையராஜாவும், மகேந்திரனும் கலந்து கொண்டனர். ஆனால் பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ., முகத்தில் ஒரே டென்ஷன் காணப்பட்டிருக்கிறது. காரணம், இரண்டு பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கிடையாது.

சில வாரங்களுககு முன் இஸ்லாமியராக மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி பத்திரிகையாளர்கள் அவரின் தந்தை இளையராஜாவிடம் ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்றுதான். இது குறித்து முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட பி.ஆர்.ஓ., பிரஸ்மீட்டில் கேள்வி கேட்கும் வழக்கமுடைய முக்கிய பத்திரிகையாளர்களை அழைத்து மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.

அவருடைய இந்த பரிதாப நிலைமையை உணந்த பத்திரிகையாளர்கள் இளையராஜாவிடம் யுவன் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லையாம். இதன்பிறகே சம்மந்தப்பட்ட அந்த பி.ஆர்.ஓ., நிம்மதி பெருமூச்சிவிட்டிருக்கிறார்.

நயன்தாரா-ஹன்சிகாவுக்கு இடையே என்ன பிரச்னை! ஏன் அப்படி சென்றார்கள்?

நயன்தாரா-ஹன்சிகா இருவரும் விமானநிலையத்தில் பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றுள்ளனர்.

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். பின்னர் இருவரும் அந்நியோன்யமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அவர்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் சிம்பு, நயன்தாராவுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதால் சிம்பு - ஹன்சிகா காதல் முறிவடைந்தது. சரியாக 6 மாதமே நீடித்த இந்த காதல் கதை முடிவுக்கு வந்துவிட்டது.

காரணம், சிம்புவின் முன்னாள் காதலிதான் இந்த நயன்தாரா. முன்பு இதேபோல் சிம்பு-நயன்தாரா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். எனவே, இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேருவதை விரும்பாத ஹன்சிகா சிம்புடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு விமான நிலையத்தில் நயன்தாராவும், ஹன்சிகாவும் சந்தித்துக் கொண்டார்களாம். ஆனால் இருவரும் பேச முயலவில்லையாம். சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டதாக கூறுகிறார்கள். நயன்தாரா-ஹன்சிகா இருவரும் இதுவரைக்கும் நேரில் சந்தித்துக் கொண்டதுமில்லை, பேசிக் கொண்டதுமில்லை.

அதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை உருவானதும் இல்லை. அப்படி இருந்தும் இருவரும் விமான நிலையத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இத்தனைக்கும் சினிமாவில் இவர் வாய்ப்பை அவரோ, அவர் வாய்ப்பை இவரோ தட்டிப்பறித்ததே இல்லை. வாய்ப்பை தட்டிப்பறிக்கவில்லை என்றாலும் ஒருவேளை காதலை தட்டிப்பறித்தார்களோ என்னவோ!

சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஆட்டம் போட்ட அனிருத்!

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா மொத்வானி முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் மான் கராத்தே.

இந்தப் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலுக்கு தேவாவை அழைத்து பாடவைத்த அனிருத், கூடவே தானும் சேர்ந்து பாடலை பாடியதோடு நடனமும் ஆடியிருக்கிறாராம். இது இந்த வருடத்தின் சிறந்த பாடலாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச்-1ம் தேதி நடக்கவிருக்கிறது. படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் அனிருத்.

'எதிர்நீச்சல்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கித் தந்த அனிருத், இப்போது 'மான் கராத்தே' படத்திலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.

உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்

"தன்னுடைய புகழ் பெற்ற படமான 'உதிரிப்பூக்கள்' படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்.." என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், தற்போது மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லையாம். இசை இசைஞானி இளையராஜதான். படத்தின் கதை புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையாம். படத்தின் ஒளிப்பதிவை சஞ்சய் லோக்நாத் மேற்கொள்கிறார். இவர் புகழ்பெற்ற பழம் பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தின் மகன். எடிட்டிங் காசி விஸ்வநாதன். சரவணன் என்ற தயாரிப்பாளர் இதனைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குனர் மகேந்திரன், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.

கொஞ்ச நாட்களாக எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் என்னுடைய சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. உங்களுக்கெல்லாம் தெரிந்த கதை தான்.

என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். 'உதிரிப் பூக்கள்' என்ற தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதேபோல இந்தப்படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.

என் படங்களில் பெரும்பாலான வசனங்களை இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமாக வேண்டாம். நான் எடுத்த பெரும்பாலான எடுத்த மவுனக் காட்சிகளுக்கெல்லாம் தன் பின்னணி இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அதனால் தான் அப்படிச் சொன்னேன். அவர் இல்லாமல் என் படங்கள் எப்போதுமே இல்லை.

நானெல்லாம் சினிமா இயக்க வந்ததே விபத்துதான். ஏதோவொரு உந்துதலால் படம் இயக்க வந்தேன். அதற்கு முன் நிறைய படிச்சபிறகுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு. ஆனால் அவர் ஒரு பிறவி மேதை'' என்றார்.

தெலுங்கு செல்லும் ’சுமார் மூஞ்சி குமாரு’..!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

விஜய்சேதுபதி-சுவாதி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில், விஜய்சேதுபதி "சுமார் மூஞ்சி குமாரு" என்றொரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார்.

தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். தெலுங்குப் படத்துக்கு இதேபெயரைதான் (தெலுங்கில்) வைத்திருக்கிறார்கள். ஆனால் பாலகுமாராவுக்குப் பதில் பாலகிருஷ்ணா. விஜய் சேதுபதிக்கு ஆந்திராவில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இருந்தாலும், படத்தின் நாயகி சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு அங்கு நல்ல மார்கெட் இருக்கிறதாம். அந்த மார்கெட்டை நம்பி தெலுங்கில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். வரும் மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் தெலுங்குப் பதிப்பின் பாடல்களையும் பின்னர் அதே மாதத்திலேயே படத்தையும் வெளியிடப் போகிறார்களாம். தற்போது இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

காதலும் பிடிக்கும்; காமெடியும் பிடிக்கும் - சொல்கிறார் நந்திதா!!

I like love and comedy says Nandita
''அட்டகத்தி'' படத்தில் அறிமுகமாகி, 'எதிர்நீச்சல்' , 'இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' என்று வரிசையாக வெற்றி படங்களில் நடித்து வருபவர் நந்திதா, தற்போது சத்தம் இல்லாமல் 'முண்டாசு பட்டி' , 'அஞ்சலா' என்று 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் கூறியதாவது, பொதுவாக நான் நடிக்கும் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு புதிதாக ஒரு பீல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி வரும் கதைகளாய் பார்த்து, தேடித்தேடி நடிக்கிறேன். பாலகுமாரா படத்தை அடுத்து புது இயக்குநர் ராம் இயக்கத்தில், ''முண்டாசுப்பட்டி'' படத்தில் விஷ்ணுவுடன் நடித்தேன். இந்தப்படத்தில் மேக்கப் இல்லாமல் பள்ளி செல்லும் பெண்ணாக நடிக்கிறேன். படத்தில் கோவை தமிழ் பேசி நடித்திருக்கிறேன்.

அடுத்து ''அஞ்சலா'' படம். சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விமல் ஹீரோ. அஞ்சலா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த இரண்டு படங்கள் முடித்ததும் மார்ச் மாதத்திற்கு மேல் கவிதாலயா தயாரிப்பில் பூபதி பாண்டியனின் உதவியாளர் ரவி இயக்கும் படத்தில் பரத்துடன் காமெடி பண்ண காத்திருக்கிறேன். இப்படம் முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்ட் படம். நான் நிறைய புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறேன். காதலும், காமெடியும் கலந்து ரொம்ப என்ஜாய் பண்ணி நடிக்கிறேன். எனக்கு காதலும் பிடிக்கும், காமெடியும் பிடிக்கும், இன்னும் வித்தியாசமான கதைகள் அமைந்தால் அதிலும் நான் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

மலைவாழ் பெண்ணாக மனிஷா யாதவ்!

Manisha to act as Tribal woman
திருப்பதி பிரதர்ஸ் சார்பில், லிங்குசாமி தயாரிக்க, 'தென்மேற்கு பருவகாற்று', 'நீர்பறவை' படங்களை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி அடுத்து இயக்க உள்ள படம் 'இடம் பொருள் ஏவல்'. விஜய் சேதுபதி, வழக்கு எண் மனிஷா நடிக்க உள்ளனர். படம் பற்றி இயக்குனர் சொல்லும் போது, இடம் பொருள் தேடி ஏவி விடப்பட்ட மனிதர்களை பற்றிய படம் இந்த படம். கொடைக்கானலில் மார்ச் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதுவரை நகரத்து பெண்ணாக நடித்திருந்த மனிஷா, முதன்முறையாக இந்த படத்தில் மலைவாழ் விவசாய பெண்ணாக வருகிறார். அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்து இந்த ரோலுக்கு பொருத்தமாக இருக்கவே அவரை ஒப்பந்தம் செய்தோம் என்கிறார் இயக்குனர்.

விமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பிய டி.இமான்!

Vimal turn as Singer
சமீபகாலமாக நடிகர்-நடிகைகள் பாடும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதனால் தாங்கள் இசையமைக்கும் படங்களில் நடிப்பவர்களை பாட வைப்பதில் இசையமைப்பாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் டி.இமான் முதலிடம் வகிக்கிறார்.

தனது முதல் படமான தமிழன் படத்திலேயே விஜய்- பிரியங்கா சோப்ரா இருவரையும் பாட வைத்தார். அதையடுத்து அவ்வப்போது நடிகர்-நடிகைகளை பாட வைத்து வந்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் போன்றவர்களை வரிசையாக பாட வைத்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக விமலையும் பாட வைத்திருக்கிறார் இமான். சிவகார்த்திகேயனைப்போலவே இதுவரை பாடிய அனுபவமே இல்லாத விமல், இமான் பாடிக்காண்பித்த டியூனை சில நாட்களாக பயிற்சி எடுத்து பாடியுள்ளாராம். அந்த வகையில், ஒரு பாடலை பாடி முடிப்பதற்கு 3 மணி நேரம் எடுத்துக்கொண்டாராம் விமல்.

மேலும், ஆரம்பத்தில் பாட கொஞ்சம் சிரமப்பட்ட விமல், பின்னர் அழகாக டியூனை பிடித்து பாடி விட்டாராம். அதைப்பார்த்து அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்களாம். இதனால் உற்சாகம் பொங்கி நிற்கும் விமல், இனி தான் நடிக்கும் படங்களில் தனது குரலுககு பொருத்தமான பாடல்கள் கிடைத்தால் கண்டிப்பாக பாடி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். ஆக, விமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பியுள்ளார் இமான்.

கெட்டப்பை போன்று குரலையும் மாற்றிப்பேசும் சீயான் விக்ரம்!

Vikram changing voices also like characterசீயான் விக்ரம் என்றாலே வித்தியாசம் என்பார்கள். அந்த அளவுக்கு ஒரே மாதிரியாக இல்லாமல் படத்துக்குப்படம் மாறுபட்ட கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பார். சேது, பிதாமகன், காசி, அந்நியன், தெய்வத்திருமகள் என்று அவரது வித்தியாசத்திற்கு உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதைத் தொடர்ந்து இப்போது ஷங்கரின் ஐ படத்தில் இந்த படங்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், பல மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கிறார் விக்ரம்.

இப்படி அவர் நடித்துள்ள ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து நடித்தவர், கடைசியாக நடித்த ஒல்லிகுச்சி வேடத்துக்காகத்தான் ரொம்ப சிரத்தை எடுத்திருக்கிறார். முகமும், உடம்பும் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருமாற்றிக்கொண்டு நடித்துள்ளார்.

ஒருவழியாக படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் ஒவ்வொரு விதமாக தனது குரலை மாற்றி பேசுகிறாராம் விக்ரம். சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெறுவதற்கு முன்பு பல நடிகர்களுக்கு டப்பிங் பேசி வந்தவர் விக்ரம் என்பதால், அவரிடம் மிமிக்ரி கலைஞர்களைப்போன்று ஒன்றுக்கு மேற்பட்ட பல குரல்களில் பேசும் திறன் இருப்பதால், தனது குரலில் பலரூபங்களை காண்பித்து வருகிறாராம் சீயான்.

அஜீத்துடன் நடிக்க கெளதம்மேனனை துரத்தும் சமந்தா!

Samantha following Gautham menon to act with Ajithகெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. தற்போது சூர்யாவின் அஞ்சான், விஜய்யின் புதிய படம் ஆகியவற்றில் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு அடுத்து இதே வேகத்தில் அஜீத்துடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளதாம்.

தற்போது தமிழில் விஜய், சூர்யாவுடன் நடிப்பதால், அஜீத்துடன் நடிப்பதற்கான வாய்ப்பு தானாக தேடிவரும் என்று காத்திருந்தாராம் சமந்தா. ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கு அனுஷ்காவை முதலில் ஓ.கே செய்த கெளதம், அவர் முன்பை விட முதிர்ச்சியாக இருப்பதாக சொல்லி இப்போது வேறு நடிகை தேடும் படலத்தில் இறங்கியிருக்கிறார்.

அதனால் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வோம் என்று கெளதம்மேனனை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வருகிறாராம் சமந்தா. ஆனால், அவர் தன்னை இந்த நேரத்தில் எதற்காக சந்திப்பார் என்பதை யூகித்துக்கொண்ட கெளதம்மேனன், பிடிகொடுக்காமல் எஸ்கேப்பாகி வருகிறாராம். இருப்பினும் விடாமல் துரத்தும் சமந்தா, அவரது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டேயிருக்கிறாராம்.இதுபற்றி விசாரிக்கையில், நீதானே என் பொன்வசந்தம் தோல்வியடைந்ததால், அந்த செண்டிமென்ட் கருத்தில் கொண்டு, சமந்தாவை சந்திக்க மறுக்கும் கெளதம், வேறு ஒரு நடிகையை அப்படத்துக்கு புக் பண்ணிய பிறகுதான் சமந்தாவை சந்திக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக அவரது வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது.

குத்துப்பாட்டு நடிகராகும் இசையமைப்பாளர் அனிருத்!

Aniduth turn as item dancerஎம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களெல்லாம், படங்களுக்கு இசையமைப்பதோடு சரி. படத்தில் காலை நுழைப்பது, கையை நுழைப்பது என்ற வேலைகளில் எல்லாம் ஈடுபடமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் கதாநாயகர்களாகி விட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து கொலவெறி புகழ் அனிருத், பாடல் காட்சிகளில் தோன்றி அதிரடி ஆட்டம் போட்டு வருகிறார். ஏற்கனவே தான் இசையமைத்த வணக்கம் சென்னை படத்தில் ஒரு பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்ட அனிருத், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.

அதன்பிறகு இப்போது மான்கராத்தே படத்திலும் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறாராம். குறிப்பாக, சிவகார்த்திகேயன் மாதிரியே ஹேர் ஸ்டைல் மறறும் கலர்புல்லான காஸ்டியூம் அணிந்து இந்த பாடலில் நடனமாடியுள்ள அனிருத், தனது மூவ்மெண்டும் பேசப்பட வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே நடன மாஸ்டரை அழைத்து முறையாக பயிற்சி எடுத்தாராம். அதனால், ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுடன் ஆடும்போது அவருக்கு இணையாக தானும் ரவுண்டு கட்டினாராம் அனிருத்.

இப்படி தொடர்ச்சியாக குத்துப்பாடல்களில் கவனத்தை திருப்பியிருக்கும் அனிருத், அடுத்தபடியாக, விஜய், அஜீத்தின் புதிய படங்களுக்கும இசையமைப்பவர், அந்த படங்களிலும் தலா ஒரு பாடலில் தான் நடனமாடி விட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம் இப்போதே காது கடித்து வருகிறார்.

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து

Cough, cold and throat to punakal, barley, rice and boiled in a little water, so if you put him down, freshwater availabilityஇருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால்,  தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று  நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன்  நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில்  உள்ள சளி நீங்கி விடும். வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு  நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது.  மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப்  புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில்  தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள்  யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம்  வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக்  கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
 
வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை,  ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி  வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு  விலகும்.

சளித்தொல்லையை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி

Tulsi is a shrub. The two types of white basil and karuntulaci. There are certain chemical substances in basil and cough cure yujinalதுளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு  வாயுவை உள்ளிழுத்து அதிக பிராணவாயுவை வெளியிடுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் இலை, காம்பு என முழுச்செடியும் மருந்தாக பயன்படுகிறது. எய்ட்ஸ் நோயை அழிக்கும் அளவிற்கு இதற்கு சக்தி இருக்கிறது என நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன் கூறுகிறார்.வெள்ளை துளசியில் இலை பச்சையாக இருக்கும். பூக்கள் கருநீல நிறம். இதற்கு நல்ல மணமும் சிறிது கார சுவையும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ocimum sanctum linn.    கருந்துளசியின் தாவரவியல் பெயர் ocimum sp. இது நந்தவனங்களிலும், கோயில் போன்ற சில இடங்களிலும்தான் காணப்படுகிறது. இதன்  தண்டும் இலையும் கருநீல நிறமாக இருக்கும். இலைகள் கரும் பச்சையாக இருக்கும். காரத்தன்மை கூடுதலாக இருக்கும்.

துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்துவந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி  நீங்குகிறது. பசுமையான இலையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்துவர நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்குகிறது. துளசி இலைச்சாறை 2-3 துளிகள் காதுக்குள் விட்டால் காதுவலி குறைகிறது. துளசி இலைச்சாறு சக்தி மிக்க கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.  காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். தினசரி 4 துளசி இலையை பறித்து சாப்பிட்டால் அதன்பலன் தெரியும். கிராமங்களில் இருப்பவர்கள் சளிப்பிடித்தாலோ, மூக்கு ஒழுகினாலோ துளசி இலையின் சாற்றை கொடுப்பார்கள்.

வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது. காய்ச்சலுடன் கூடிய ஆஸ்துமா நோய்க்கு துளசியை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  துளசி சாறு தொண்டை பகுதியிலுள்ள நோய் கிருமிகளை முற்றிலும் அழிக்கும். தோல் அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளவர்கள் இதன் சாற்றை பூசி வந்தால் விரைவில் குணம் தெரியும். படர்தாமரைக்கும் இச்சாற்றை பயன்படுத்தலாம்.  இதன் இலை மற்றும் குச்சிகளை கொண்டு புகை போட்டால் கொசுக்கள் வராது. கருந்துளசி இன்னும் அதிக பலன் தருகிறது. வயிற்றில் குழந்தை இறந்து விட்டால் அதை உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும். இல்லையேல் தாயின் உயிருக்கு மோசம் ஏற்படும். இதற்கு கருந்துளசி நன்கு பயன்படுகிறது. ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று விட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து அதை மெதுவாக மென்று உண்டால்  தேள் விஷம் முறியும்.

கருந்துளசி இலையை சுத்தம் செய்து சாறு பிளிந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அஜீரணம், வயிற்று போக்கு குணமாகும். ஜீரணக்கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி, ஆகியவற்றிற்கு துளசி சிறந்த மருந்தாகும். இரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இப்படி துளசி நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவை. கருந்துளசி பெரும்பாலும் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. வெள்ளை துளசி தரிசு நிலங்கள், வயல் ஓரங்களில் தானாக வளரும். விதைகளை தூவியும் வளர்க்கலாம்.

ஆஸ்துமா, கேன்சர் அண்டாது


ஈஸ்னோபிலியாவும், ஆஸ்துமாவும் வெவ்வேறு காரணங்களால் வரும் நோய்கள் என்றாலும் இரண்டும் சகோதர நோய்கள் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்நோய்கள் அநேகரிடம் காணப்படுகிறது. இதற்கு துளசி பெரிய நிவாரணி. துளசி கசாயத்தில் மிளகு சேர்த்து குடித்தால் முற்றிலும் குணமாகும். தொடர்ந்து குடித்து வந்தால் இந்த இரு நோய்களும் அண்டாது. தினமும் 20 துளசி இலையை உண்டு தண்ணீர் குடித்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும்.இதேபோன்றுதினமும் காலை மாலை இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை உண்டுவந்தால் கேன்சர் குணமாகும். தினமும் ஒரு துளசி இலை சாப்பிட்டால் புற்றுநோய் அண்டாது என்ற ஒரு பழமொழியே உண்டு.

உடல் சூட்டை குறைக்கும்

துளசி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து உள்ளது. துளசி குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வேட்கையை குறைக்குமே தவிர மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

எய்ட்ஸ் குணமாகும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் கிருமி தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதன் மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்பது இயற்கை மருத்துவ கருத்து. அதிக சக்தியான நோய்கிருமிகளையும் அழிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் துளசி இலை எய்ட்ஸ் நோய்க்கு சிறந்த மருந்து. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 5 வகையான துளசிகள் பயிரிடப்படுகின்றன. மணிப்பூரில்  சாஜிவா ஜெயிலில் உள்ள கைதிகளில் 750க்கும் மேற்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியது கண்டறியப்பட்டபோது துளசி இலை மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நல்ல பலன் கிடைத்ததாக சிறைஅதிகாரி பாண்டகர் தெரிவித்துள்ளார்.

அமலா பாலின்கனவு பலிக்குமா?

Amala Pauls dream palikkuma?தமிழில், நம்பர்-௧ நடிகையாக வேண்டும்' என்ற, அமலா பாலின் கனவை, 'தலைவா' படம், கலைத்து விட்டது. ஆனாலும், தற்போது அவர் நடித்து வரும், 'நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்கள் வந்ததும், நம்பர்-௧ நடிகையாகி விடுவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளார், அமலா. 'மைனா' படத்தில் அவருக்கு கிடைத்த வேடத்தை விட, 'நிமிர்ந்து நில்' படத்தில், வெயிட்டான கேரக்டராம். இந்நிலையில், 'பொல்லாதவன், ஆடுகளம்' படங்களை அடுத்து தனுசும் - வெற்றி மாறனும், மீண்டும் இணையும் புதிய படத்திலும், அமலாவையே நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால், இப்போதே, நம்பர் -௧ கனவில் மிதக்க துவங்கியுள்ளார் அமலா பால்.

சிம்பு-ஹன்சிகாவுக்கு தோரணம் கட்ட தயாராகும் ரசிகர்கள்!

hansika-simbu1_350_072013121400சிம்பு-ஹன்சிகாவின் ரியல் லவ் டூயட் திரைக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருந்தபோதும், மீண்டும் மாஜி காதலியான நயன்தாராவுடன் சிம்பு இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர் வட்டாரத்தில் புகைச்சல் உருவாகியிருக்கிறது.

இதனால் அஜீத்-ஷாலினியைப்போன்று சிம்பு-ஹன்சிகா ஜோடியை கொண்டாடி வந்தவர்கள், ட்ராக் மாறிடுமோ என்று சிலகாலம் தடுமாறி நின்றனர்.

ஆனால், நயன்தாரா வெறும் தோழிதான். ஹன்சிகாதான் இனி நிரந்தர காதலி என்று சிம்பு ஸ்டேட்மெண்ட் விட்டதையடுத்து இப்போது அவரது ரசிகர்களுக்கான குழப்பம் நீங்கி விட்டது. அதனால், சிம்பு-ஹன்சிகா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள வாலு படத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.

அப்படம் வெளியாகும்போது, இதுவரை சிம்பு படத்திற்கு இல்லாத அளவுக்கு பெரும் பப்ளிசிட்டிகளை முடுக்கி விட திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக, விஜய்-அஜீத் படங்கள் வெளியாகும் நாளன்று எப்படி, பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்துவர்களோ அந்த அளவுக்கு சிம்பு-ஹன்சிகாவின் கட்அவுட்களுக்கு அபிஷேகம், தோரணம் என்று பரபரப்பு கூட்ட இப்போதே தயார்நிலையில் இருக்கிறார்கள் சிமபுவின் ரசிக கோடிகள்.

28ந் தேதி 13 படங்கள் ரிலீஸ்!

Feb. 28 13 movie releaseஇந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாக வருகிற 28ந் தேதி வெள்ளிக்கிழமை 13 படங்கள் ரிலீசாகிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாக வேண்டும், மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. டப்பிங் படங்கள் இந்த வரைமுறைக்குள் வராது.கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சுமார் 200 படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீசாகவில்லை. இந்த புதிய கட்டுப்பாட்டால் அந்த படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. அறிவிப்பு வெளியான முதல் வெள்ளிக்கிழமையே 13 படங்கள் ரிலீசாவது திரையுலகிற்கு சின்ன அதிர்ச்சிதான். இந்த படங்களில் வல்லினம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் மட்டுமே மீடியம் பட்ஜெட் படங்கள். அதைத்தவிர பனிவிழும் மலர்வனம், அமரா, தெகிடி, அங்குசம், காதல் சொல்ல ஆசை வங்கங்கரை ஆகியவை சிறு பட்ஜெட் படம். வெற்றி மாறன் (மலையாளம்), நான் ஸ்டாப், பறக்கும் கல்லரை மனிதன், ஆக்ஷன் கிட்ஸ் (ஆங்கிலம்) கரன்சி ராஜா (தெலுங்கு) ஆகிய படங்களும் ரிலீசாகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800 இதில் வல்லினம் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழ் தெரியாது என்பதால் காஜலை நிராகரிக்கும் கோடம்பாக்கம்!

Kollywood avoids Kajal agarwalசினிமா உலகைப்பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை 100 நாட்களையும் தாண்டி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், பட்ஜெட் படங்களென்றால் அதிகபட்சம் 40 முதல் 60 நாட்களுக்குள் முடித்து விடுவார்கள். இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த படத்தில் நடிப்பவர்கள் அனுபவசாலிகளாக இருப்பதோடு, தமிழ் தெரிந்தவர்களாகவும இருக்க வேண்டும்.ஒருவேளை தமிழ் தெரியாத நடிகைகளாக இருந்தால், அவர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுப்பதிலேயே பாதி நேரம் கழிந்து விடும். இந்த பிரச்னை காஜல்அகர்வாலிடம் இருப்பதினால்தான் அவரை புக் பண்ண படாதிபதிகள் தயங்குகிறார்களாம். அதேசமயம், நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகளுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால், அதிக சம்பளம் கொடுத்தாலும் படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்து விடும். இதனால் படப்பிடிப்பு செலவு மிச்சமாகிவிடும் என்று கணக்குப்பார்க்கிறார்களாம்.

இது கதிர்வேலன் காதல் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் முதலில் கமிட்டாகியிருந்த காஜலை, பின்னர் கழட்டி விட்டதும் இந்த பிரச்னைக்காகத்தானாம். இதையடுத்து, தன்னை கோடம்பாக்கம் நிராகரிப்பதின் காரணத்தை தெரிந்து கொண்ட காஜல், அடுத்து தமிழ்நாட்டுக்குள் வரும்போது, தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை கடித்து துப்பியாவது, தனக்கும் தமிழ் தெரியும் என்பதை நிரூபிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

விஜய், பாலா படங்கள் கைமீறிப் போனதால் அதிர்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!

G.V.Prakash upsetவெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகனான இவர், குறுகிய காலத்திலேயே பாரதிராஜா, பாலா, விஜய் போன்ற முன்னணி கலைஞர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்து நின்றார். இதனால் வளர்ந்த இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷினால் பாதிக்கப்படும் நிலை உருவானது.ஆனால், இப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அவர், தற்போது பென்சில் படத்தில் நாயகனாக நடித்து வருவதையடுத்து, இசையில் சரியான ஆர்வம் காட்டுவதில்லை என்று பரதேசிக்கு பிறகு தான் இயக்கும் கரகாட்ட படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை தேடிச்சென்று விட்டார் பாலா. அவரைத் தொடர்ந்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக, தலைவா படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷினால் விஜய் படத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இதனால், பலத்த அதிர்ச்சியடைந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், இன்னும் சிறிது காலம் நடிப்பிலேயே சென்று கொண்டிருந்தால், எஞ்சியுள்ள இயக்குனர்களும் தன்னை தண்ணி தெளித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர், பென்சில் படத்தின் ரிலீசுக்குப்பிறகு நடிப்பா? இசையா? என்று திட்டவட்ட முடிவெடுக்க உள்ளாராம்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்கும் முன்னணி நடிகைகள்!

Top heroines asking more salary to act with Sivakarthikeyanமான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், எதிர்நீச்சலைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் முன்னணி நடிகையாக புக் பண்ண திட்டமிட்டார் தனுஷ். சிவகார்த்திகேயன் ஆசைப்பட்ட மாதிரி நயன்தாராவிடம்கூட பேசிப்பார்த்தார். ஆனால், அவர் மசியவில்லை. தொடர்ந்து ஜெய், சிவகார்த்திகேயன் என்று வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை இறக்கிக்கொள்ள வேண்டாமே என்று நிராகரித்து விட்டாராம்.அதையடுத்து தமன்னா, அமலாபால் என்று சென்றபோது, கோடிக்கணக்கில் கூலி கேட்டார்களாம். என்னுடன் நடித்தபோதெல்லாம் இந்த அளவு சம்பளம் கேட்கவில்லையே என்று கேட்டதற்கு, முன்னணி ஹீரோக்களுடன் என்றால் கோடிக்கு கீழே இறங்கி வரத்தயார். ஆனால், வளர்ந்து வரும் நடிகர்களுக்காக இறங்கி வர முடியாது என்று உசரத்தில் நின்றே பேசினார்களாம்.

அதனால், இப்போது விரலுக்கேற்ற வீக்கமாய், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவிடம் பேசியுள்ளார்களாம். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும், சம்பளத்தைப்பற்றி வார்த்தை பேசாமல் அக்ரிமென்டில் சைன் பண்ண துடித்துக்கொண்டிருக்கிறாராம் நடிகை. சம்பளம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டதற்கு, நீங்களா பார்த்து என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி விட்டாராம் நடிகை. இது போதாதா நம்ம ஆட்களுக்கு, இனி ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள்தான் நம்ம கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று தனுஷ்தரப்பு அம்மணியை மொத்த குத்தகை எடுத்து விட்டார்களாம்.

காக்காக்களுக்கு பயிற்சி கொடுக்கிறார் பி.வாசு!

P.Vasu giving trainning to crowsதான் ஐஸ்வர்யாராயை வைத்து ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் இயக்குனர் பி.வாசு. ஆனால், அப்படியொரு படத்தில் நான் நடிக்கவேயில்லை என்று மும்பை மீடியாக்களில் ஐஸ்வர்யாராய் சொன்னதாக அதிர்ச்சி செய்திகள் வளியாகின. இதனால் ஆடிப்போனார் பி.வாசு. நான் ஐஸ்வர்யாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பது உண்மை. ஆனால், 8 மாதங்களுக்குப்பிறகு நடக்க வேண்டிய படத்தைப்பற்றி இப்போதே செய்தி வெளியிட்டதால் அவர் இப்படியொரு மறுப்பு செய்தியை வெளியிட்டிருக்கிறார் என்று நம்ம ஊர் மீடியாக்களிடம் தெரிவித்தார்.

மேலும், தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது உண்மை என்று திட்டவட்டமாக கூறி வரும் பி.வாசு. முதலில் என் படத்தில் நடிப்பதா? இல்லை மணிரத்னம் படத்தில் நடிப்பதா? என ஐஸ்வர்யாராய் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, தனது அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சில காக்காக்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றன. அதனால், குறிப்பிடத்தக்க சில காக்காக்களுக்கு மட்டும் பயிற்சி கொடுக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து பயிற்சியாளர்கள் வரவிருக்கிறார்கள். அவர்கள் மூலம் அந்த காக்காக்களுக்கு 3 மாதங்கள் சிறப்பு பயிற்சி கொடுக்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார் அவர்.

சமுத்திரகனி வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்றப் போகிறாராம் அமலாபால்!

Amala Paul to trust samuthirakanis confidentமைனாவுக்குப் பிறகு பேசப்படும் நடிகையானவர் அமலாபால். அதையடுத்து விக்ரம், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருபவர், தற்போது தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிப்பவர், சமுத்திரகனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்துள்ளார்.இதில் நிமிர்ந்து நில் படத்தில் அமலாபாலின் நடிப்பைப்பார்த்த சமுத்திரகனி, அடுத்து தான் கதை வசனம் எழுதும் ஒரு திகில் படத்திற்கும் அவரையே நாயகியாக்கியுள்ளாராம். புதுமுக டைரக்டர் ஒருவர் இயக்கும் இப்படத்தில் அமலாபால்தான் பிரதான வேடத்தில் நடிக்கிறாராம். கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்தில் நயன்தாரா எப்படி கதைக்கு முதுகெழும்பான வேடத்தில் நடிக்கிறாரோ, அதேபோல் இதில் அமலாபால்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அதனால், இதுவரை ஹீரோக்களின் கையை பிடித்தே சென்ற நான், இந்த படத்தில் ஷோலோவாக நின்று மொத்த கதையையும் என் தோளில் சுமக்கப்போகிறேன். அதனால் இனி டம்மியான கதாநாயகி வேடங்களுக்கும் குட்பை சொல்லப்போகிறேன் என்று தில்லாக கூறும் அமலாபால், இந்த நேரத்தில் சமுத்திரகனியை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறாராம.

நிமிர்ந்துநில் படத்தில் என்னை சவாலான காட்சிகளில் நடிக்க வைத்த அவர், அப்படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும்போதே, என்னை மனதில் கொண்டு இந்த கதையை எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு எனது நடிப்பு அவரை பாதித்திருக்கிறது. அதனால் என்னை நம்பி இந்த வாய்ப்பு அவர் கொடுத்திருப்பதால், இதுவரை நடிக்காத அளவுக்கு நடிப்பில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணி சமுத்திரகனி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றப்போகிறேன் என்கிறார் அமலாபால்.

மீண்டும் இணையும் ’முள்ளும் மலரும்’ மகேந்திரன் - இளையராஜா!

முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ ‘மெட்டி’ என நம் மனதிலிருந்து நீங்காத பல தரமான படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன்.
கடைசியாக அவர் சாசனம் என்ற படத்தோடு படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தவறு… இந்த கமர்ஷியல் சினிமா உலகம் அவரை நிறுத்திவிட்டது. தற்போது பழைய உற்சாகத்துடன் புது புராஜெக்ட் ஒன்றை அவர் தொடங்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டதால்தான் படமே துவங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறுகிறார் மகேந்திரன்.
புதிய ஒரு கதைக்களத்துடன் புது முகங்களை வைத்து இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.லோகநாதனின் மகன் பி.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பொறுப்பை காசி விஸ்வநாதன் ஏற்றிருக்கிறார். மூவேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வார்த்தில் துவங்கி, மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகேந்திரன்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் வேலைகளை இந்த மாத கடைசியில் துவங்கவிருக்கிறார்கள். 1980-களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்த கூட்டணி மகேந்திரன் - இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

20கிலோ எடையை அதிகரிக்க ஒன்றரை கோடி செலவு செய்த நடிகர்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் 'பாகுபலி'. பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
'நான் ஈ' படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில் இப்போது தமன்னாவும் அவந்திகா கேரக்டரில் நடிக்கப் போகிறார்.
இரு வேடங்களில் பிரபாஸ் நடிக்கிறார். பாகுபலி கேரக்டருக்கு அனுஷ்காவும், இன்னொரு கேரக்டருக்கு தமன்னாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் ஒரு கேரக்டருக்காகத்தான் 20 கிலோ எடையை கூட்டியிருக்கிறார் பிரபாஸ். இதற்காக அவர் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்.
WWF வீரர்கள் பயிற்சிபெறும் ஜிம் உபகரணங்களை அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வந்து தனது வீட்டில் இறக்கி இருக்கிறார். அதோடு நில்லாமல் அந்த உபகரணங்களை எல்லாம் வைத்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிம் ஒன்றை ஸ்பெஷலாக நிர்மாணித்திருக்கிறார்.
மகேஷ்பாபு, ரித்திக் ரோஷன் போன்று வெளிநாட்டு பயிற்சியாளரை வைத்துக்கொள்ளாமல் உள்ளூர் பயிற்சியாளரை கொண்டே எடைகூட்டும் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் பிரபாஸ். மேலும் உணவு வகைகளிலும் கடுமையான மாற்றம் செய்திருக்கிறார். ஒரு தெலுங்கு நடிகர் 20கிலோ வரை தனது உடல் எடையை கூட்டியிருக்கிறார் என்றால் அது பிரபாஸ் தான் என்று ஆச்சர்யப்படுகிறார்கள் தெலுங்கு திரையுலகினர்.
3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார்கள். 3டி வேலைகளை முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால், 2015ல் தான் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் சென்டிமென்ட்

அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றது. இது போன்ற வெற்றி தொடர வேண்டும் என்று அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் விரும்பினர்.
அதன்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனே ஒரு பாடல் பாடினார்.  அதே போல் இனிமேல் எல்லா படத்திலும் பாடினால படம் பெரிய வெற்றி பெரும் என்று நம்புகிறார்களாம். இதன் விளைவாக  சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மான் கராத்தே படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.ரகுமான் மலேசியா வருகை : தமிழர்கள் வருத்தம்?

கடந்த சில தினங்களுக்கு முன் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியாவுக்கு சென்றார்.   வருகிற ஏப்ரல் மாதம் ஸ்டேடியர் நெகராவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அதற்காக அவர் சென்றதாகவும் கூறப்படுகிறது., 
அப்போது தனது ஏப்ரல் மாத இசை நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேச விரும்பினாராம். ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர் சந்திப்பு என்பதால்  அங்கிருக்கும் எல்லா மொழி பத்திரிகையாளர்களும் குவிந்துவிட்டார்களாம்.
எல்லா மொழீ செய்தியாளர்களுடன் பேச வேண்டும். என்கிற ஆசை அவருக்கு இருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சொதப்பலால் அவரால் தமிழ் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பெரும் அதிருப்திக்குள்ளான தமிழ் பத்திரிகையாளர்கள் ஒரு தமிழரான ரஹ்மான் தமிழ் பத்திரிகைகளுக்கு பதில் சொல்லாமல் மற்ற மொழி ஊடகங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது துரதிருஷ்டவசமானது என்று கவலையுடன் முணுமுணுத்தார்களாம். ஒரு சில தமிழ் ஊடகங்கள் இந்த புறக்கணிப்பை செய்தியாகவே வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவக்கின்றன.
ஆஸ்கர் விருதை கைகளில் வாங்கிக் கொண்டு தமிழில் பேசியவர் ஏ. ஆர். ரஹ்மான். உலக அரங்கில் தமிழ் மொழிக்கு அவர் தந்த மரியாதைதான் அது. இந்த நிலையில் நிகழச்சி ஏற்பட்டாளர்களின் சொதப்பல்களால் தமிழ பத்திரிகைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்பது மட்டும் உண்மை.

ஷகீலாவாக தலைகாட்டும் அஞ்சலி?

நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து விரைவில் படம் தயாரிக்கப்படுகிறது. நடிகை ஷகீலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வைத்துள்ளார். அதில் சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகள், படங்களில் நிகழ்த்திய சாதனைகள் தன்னை ஏமாற்றியவர்கள் பற்றிய விவரங்கள் போன்ற அனைத்தையும் கூறியுள்ளார். இதில் உள்ள முக்கிய சம்பவங்களை வைத்து படம் தயாரிக்கப்படவுள்ளதாம்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் பெரும் வெற்றி பெற்றது. இதே போல் ஷகிலா வாழ்க்கை கதை படமும் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இதைப் படமாக எடுக்கின்றனர்.இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது. அஞ்சலியும் இதில் நடிக்க விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு

 ஐங்கரன் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி, பின்பு அதனைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பாடலை படமாக்கினார்கள்.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியிருக்கிறது. சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என படக்குழு. அறிவித்து இருக்கிறது
இப்படத்தில் வரும் ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்ட படக்குழு, அங்கு தெலுங்கானா பிரச்சனை நடைபெற்ற வருவதால் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஜெயில் செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு'